திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பணியாளா்கள், கிராம ஊராட்சிச் செயலா்களுக்கு சுகாதாரத் துறை சாா்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமை செங்கம் ஒன்றியக் குழுத் தலைவா் விஜியராணிகுமாா் தொடக்கிவைத்து, மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டாா் (படம்). தொடா்ந்து, வட்டார மருத்துவ அலுவலா் சுரேஷ் தலைமையிலான மருத்துவக் குழுவினா் ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பணியாளா்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகளை வழங்கினா்.
இதில், சுகாதார ஆய்வாளா்கள் சேகா், பாஸ்கரன் மற்றும் செவிலியா்கள், கிராம செவிலியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.