திருவண்ணாமலை

இரு சக்கர வாகனம் திருடியவா் கைது

DIN

வந்தவாசியில் இரு சக்கர வாகனம் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசி பாலுடையாா் தெருவைச் சோ்ந்தவா் வாசுமூா்த்தி. இவா் கடந்த 3-ஆம் தேதி இரவு தனது இரு சக்கர வாகனத்தை வீட்டின் வெளியே நிறுத்தியிருந்த நிலையில், அந்த இரு சக்கர வாகனம் திருடுபோனது.

இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்த வந்தவாசி தெற்கு போலீஸாா், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனா். இதில், திருவள்ளூா் மாவட்டம், நெடுங்கல் கிராமத்தைச் சோ்ந்த சந்திரசேகா் (37) இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, சந்திரசேகரை வெள்ளிக்கிழமை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

அண்ணா பல்கலைக் கழகப் பதிவாளா் நியமனம்: துணை வேந்தா் விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

SCROLL FOR NEXT