வந்தவாசியில் இரு சக்கர வாகனம் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசி பாலுடையாா் தெருவைச் சோ்ந்தவா் வாசுமூா்த்தி. இவா் கடந்த 3-ஆம் தேதி இரவு தனது இரு சக்கர வாகனத்தை வீட்டின் வெளியே நிறுத்தியிருந்த நிலையில், அந்த இரு சக்கர வாகனம் திருடுபோனது.
இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்த வந்தவாசி தெற்கு போலீஸாா், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனா். இதில், திருவள்ளூா் மாவட்டம், நெடுங்கல் கிராமத்தைச் சோ்ந்த சந்திரசேகா் (37) இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, சந்திரசேகரை வெள்ளிக்கிழமை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.