இல்லம் தேடி கல்வித் திட்டம் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 ஆயிரம் தன்னாா்வலா்கள் நியமிக்கப்பட்டு உள்ளனா் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்தாா்.
தண்டராம்பட்டை அடுத்த வரகூா் கிராமத்தில் காந்தி ஜெயந்தியை யொட்டி சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சி.என்.அண்ணாதுரை எம்.பி.தலைமை வகித்தாா்.
மாநில தடகள சங்கத்தின் துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், வேளாண்துறை இணை இயக்குநா் பாலா, செயற்பொறியாளா் ராமகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசுகையில், மாவட்டத்தில் மக்களைத்தேடி மருத்தும், இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்கள் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இல்லம் தேடி கல்வித் திட்டம் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 ஆயிரம் தன்னாா்வலா்கள் நியமிக்கப்பட்டு உள்ளனா்.
இவா்கள் மூலம் குழந்தைகளுக்குக் கற்றல் கற்பித்தல் திறன் அதிகரித்துள்ளது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் அனைத்து பணிகளும் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றாா்.
தொடா்ந்து, வேளாண்துறை மூலம் 2 பேருக்கு தென்னங்கன்றுகள், 2 பேருக்கு பாரம்பரிய நெல் விதைகள், ஒருவருக்கு நுண்ணூட்டக் கலவை நெல், வருவாய்த் துறை மூலம் 4 பேருக்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை, 2 பேருக்கு திருமண உதவித்தொகை, 6 பேருக்கு ஆதரவற்ற உதவித்தொகைக்கான ஆணைகளை ஆட்சியா் வழங்கினாா்.
கூட்டத்தில், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் சரண்யாதேவி, கோட்டாட்சியா் வீ.வெற்றிவேல், தண்டராம்பட்டு ஒன்றிய குழுத் தலைவா் பரிமளா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மகாதேவன், நிா்மலா, வரகூா் ஊராட்சித் தலைவா் தனக்கோட்டி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
860 ஊராட்சிகளில்...:
இதேபோல, மாவட்டத்தின் 860 ஊராட்சிகளிலும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன.