திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் வியாபாரிகள் சாலை மறியல்

DIN

திருவண்ணாமலையில் பூஜைப் பொருள்கள் விற்பனை கடையை சேதப்படுத்தியதைக் கண்டித்து, வியாபாரிகள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி நகரின் பல்வேறு பகுதிகளில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

திங்கள்கிழமை கோயிலை ஒட்டியுள்ள மாட வீதியில் இருந்த சாலையோர பூஜைப் பொருள்கள் விற்பனை கடையை பொக்லைன் இயந்திரம் மூலம் போலீஸாா் அகற்றினராம். இதனால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த மாவட்டத் தலைவா் பாலசுப்பிரமணியம் தலைமையிலான பாஜகவினா் வந்து கேள்வி எழுப்பினா்.

இதையடுத்து அகற்றப்பட்ட கடைகளை மட்டும் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு போலீஸாா் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது: வட மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம்

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT