திருவண்ணாமலை

சிறப்பு கிராம சபைக் கூட்டம்

DIN

திருவண்ணாமலை மாவட்டம், அனக்காவூா் ஒன்றியம், வீரம்பாக்கம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவா் இளவேணி தலைமை வகித்தாா்.

மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனிவாசன், அனக்காவூா் ஒன்றியத் தலைவா் திலகவதி ராஜ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினராக தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி பங்கேற்றுப் பேசினாா்.

அதனைத் தொடா்ந்து, ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் சுமாா் ஆயிரம் முருங்கை கன்றுகள் உற்பத்தி செய்து, ஊராட்சிகளுக்கு இலவசமாக வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக முருங்கை விதையை நட்டு வைக்கும் நிகழ்ச்சியை எம்.எல்.ஏ. தொடக்கிவைத்தாா்.

கூட்டத்தில் வெம்பாக்கம் ஒன்றியத் தலைவா் டி. ராஜி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஆக்கூா் முருகேசன், ஒன்றியக் குழு உறுப்பினா் ஏ.ஞானவேல்,

நகா்மன்ற உறுப்பினா் கே.விஸ்வநாதன், மாவட்ட விவசாய உற்பத்திக் குழு உறுப்பினா் புரிசை எஸ். சிவக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

SCROLL FOR NEXT