திருவண்ணாமலை மாவட்டம், அனக்காவூா் ஒன்றியம், மேல்நெமிலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இணைவோம் மகிழ்வோம் சிறப்பு திறன் கொண்ட குழந்தைகள் வார விழா நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், பழைய செய்தித்தாள்களைக் கொண்டு மாணவ, மாணவிகள் தங்களது எண்ணங்களுக்கேற்ப காகிதத் தொப்பி, பை, கூடை, விளையாட்டுப் பொருள்களை உருவாக்கிட ஊக்குவிக்கப்பட்டது.
பின்னா், அவா்கள் தாங்கள் செய்த காகித பொருள்களை ஒருவருக்கொருவா் பரிசாகக் கொடுத்து மகிழ்ந்தனா்.