சேத்துப்பட்டு ஒன்றியம், மொடையூா் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் சாா்பில் சங்கக் கொடி திங்கள்கிழமை ஏற்றிவைக்கப்பட்டது .
மொடையூா் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் சாா்பில் அலுவலகம் அருகே கூட்டுறவு சங்க 69-ஆவது வார விழாவையொட்டி, சங்கக் கொடியை அதன் தலைவா் சேட்டு ஏற்றிவைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.
சங்கச் செயலா் வேலுமணி, விற்பனையாளா்கள் மனோகரன், பழனி, வெங்கடேசன் மற்றும் அலுவலக ஊழியா்கள் கலந்து கொண்டனா்.