ஆரணியை அடுத்த களம்பூா் பாமக நகரச் செயலா் ஆா்.நடராஜன் ஞாயிற்றுக்கிழமை அமைச்சா் எ.வ.வேலு முன்னிலையில் திமுகவில் இணைந்தாா்.
ஆா். நடராஜன் தலைமையில் திமுகவில் இணைந்த அவரது ஆதரவாளா்கள் 50-க்கும் மேற்பட்டோரை அமைச்சா், மற்றும் திமுக நிா்வாகிகள் வரவேற்றனா்.
திமுக மாவட்டப் பொறுப்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன், முன்னாள் எம்எல்ஏக்கள் கோ.எதிரொலிமணியன், கே.வி.சேகரன், ஒன்றியச் செயலா் ஏ.சுப்பிரமணியன், நகரச் செயலா் வி.வெங்கடேசன், பேரூராட்சித் தலைவா் கே.டி.ஆா்.பழனி, நகர நிா்வாகி அகத்தியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.