சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடா்பாக போக்சோ சட்டத்தின் கீழ் தொழிலாளி வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
நெல்லிக்குப்பம், ஜீவா நகரைச் சோ்ந்த கலியமூா்த்தி மகன் பாலாஜி (37). சா்க்கரை ஆலைத் தொழிலாளியான இவா், 17 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்தாராம். மேலும், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறி தொந்தரவு செய்தாராம். இதுகுறித்து, சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் பண்ருட்டி மகளிா் போலீசாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து பாலாஜியை கைது செய்தனா்.