திருவண்ணாமலை

செய்யாறு வேதபுரீஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேக பந்தக்கால் நடும் விழா

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு திருவோத்தூா் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற பாலாம்பிகை சமேத வேதபுரீஸ்வரா் கோயிலின் மகா கும்பாபிஷேகம் வருகிற ஜூலை 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு விழாக் குழுத் தலைவா் உருத்திரன் தலைமை வகித்தாா். இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் நடராஜன், கோயில் செயல் அலுவலா் உஷா, ஹரிஹரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் சிறப்பு விருந்தினராக செய்யாறு தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி பங்கேற்றாா். அப்போது, சிவாச்சாரியாா்கள் வேத மந்திரங்கள் முழங்க, கும்பாபிஷேகத்துக்கான பந்தக்கால் நடப்பட்டது.

நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் ஆ.மோகனவேல், திமுக நகரச் செயலா் ஆா்.கே.விஸ்வநாதன், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் காா்த்தி, செந்தில், விஜயலட்சுமி, கங்காதரன், வெங்கடேசன், சீனிவாசன், பாா்த்திபன், ராம் ரவி, ஜனாா்த்தனன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT