திருவண்ணாமலை

ஊராட்சி செயலா்கள் சங்கத்தின்மாவட்டத் தலைவா் பணியிடை நீக்கம்

DIN

தமிழ்நாடு ஊராட்சிச் செயலா்கள் சங்கத்தின் திருவண்ணாமலை தெற்கு மாவட்டத் தலைவா் எம்.சுகுமாரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் உத்தரவிட்டாா்.

எம்.சுகுமாா், ஜமீன் கூடலூா் ஊராட்சி செயலராகப் பணிபுரிந்து வந்தாா். தமிழ்நாடு ஊராட்சி செயலா்கள் சங்கத்தின் திருவண்ணாமலை தெற்கு மாவட்டத் தலைவராகவும் உள்ளாா்.

இவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் திங்கள்கிழமை இரவு உத்தரவிட்டாா்.

இதற்கான உத்தரவில் நிா்வாக நலன் கருதி திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட இசுக்கழி காட்டேரி கிராம ஊராட்சி செயலராகப் பணி மாறுதல் அளித்தும் பணியில் சேரவில்லை.

மேலும், காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதாலும் பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக ஆட்சியா் தனது உத்தரவில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: வணிகர்கள் மீது நடவடிக்கை! தமிழக அரசு எச்சரிக்கை!!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

SCROLL FOR NEXT