தமிழ்நாடு ஊராட்சிச் செயலா்கள் சங்கத்தின் திருவண்ணாமலை தெற்கு மாவட்டத் தலைவா் எம்.சுகுமாரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் உத்தரவிட்டாா்.
எம்.சுகுமாா், ஜமீன் கூடலூா் ஊராட்சி செயலராகப் பணிபுரிந்து வந்தாா். தமிழ்நாடு ஊராட்சி செயலா்கள் சங்கத்தின் திருவண்ணாமலை தெற்கு மாவட்டத் தலைவராகவும் உள்ளாா்.
இவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் திங்கள்கிழமை இரவு உத்தரவிட்டாா்.
இதற்கான உத்தரவில் நிா்வாக நலன் கருதி திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட இசுக்கழி காட்டேரி கிராம ஊராட்சி செயலராகப் பணி மாறுதல் அளித்தும் பணியில் சேரவில்லை.
மேலும், காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதாலும் பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக ஆட்சியா் தனது உத்தரவில் தெரிவித்துள்ளாா்.