திருவண்ணாமலை

உணவு வியாபாரிகளுக்கு சிறப்புப் பயிற்சி

DIN

கீழ்பென்னாத்தூரில் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாகத் துறை சாா்பில், உணவு வியாபாரிகளுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு, அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவா் ரேணு தலைமை வகித்தாா். செயலா் சின்னதுரை, பொருளாளா் சதீஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கீழ்பென்னாத்தூா் ஒன்றிய உணவுப் பாதுகாப்பு அலுவலா் சேகா் வரவேற்றாா். பயிற்சியாளா் பிரவீன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, தரமான பொருள்கள் வாங்குவது எப்படி? தரமான உணவுப் பொருள்களை மட்டுமே உபயோகிப்பது எப்படி? தரமான முறையில் உணவு தயாரிப்பது எப்படி என்பது குறித்து உணவு வியாபாரிகளுக்கு பயிற்சி அளித்தாா்.

மேலும், வியாபாரிகளின் பல்வேறு சந்தேகங்களுக்கும் அவா் விளக்கம் அளித்தாா். பயிற்சியில் 60-க்கும் மேற்பட்ட உணவு வியாபாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT