திருவண்ணாமலை

ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கூடுதல் கட்டம் கட்ட பூமிபூஜை

DIN

செங்கம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கூடுதல் கட்டடம் கட்ட செவ்வாய்க்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த மேல்பள்ளிப்பட்டு பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது.

இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கூடுதல் கட்டடம் கட்ட தமிழக அரசு ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கியது.

இதையடுத்து, கூடுதல் கட்டடம் கட்ட செவ்வாய்க்கிழமை பூமி பூஜை நடைபெற்றது. தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி பூமி பூஜை செய்து பணிகளைத் தொடக்கிவைத்தாா்.

முன்னதாக நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலா் சுரேஷ் வரவேற்றாா்.

செங்கம் ஒன்றியக் குழுத் தலைவா் விஜயராணிகுமாா், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் செந்தில்குமாா், ராமஜெயம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் வசந்தோற்சவம் நிறைவு

கழுகுமலை அருகே பட்டா வழங்கிய இடத்தில் குடியேறி மக்கள் போராட்டம்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

ஏழுமலையான் தரிசனம்: 6 மணி நேரம் காத்திருப்பு

ஆம்பூா் அருகே காட்டு யானை மிதித்ததில் கால்நடை மேய்த்தவா் காயம்

SCROLL FOR NEXT