திருவண்ணாமலை

காட்டுப் பூனை வேட்டை: இருவா் கைது

DIN

திருவண்ணாமலை அருகே காட்டுப் பூனையை வேட்டையாடிவிட்டு, மானை வேட்டையாட முயன்ற இருவரை வனத்துறையினா் கைது செய்தனா்.

திருவண்ணாமலையை அடுத்த சொரகொளத்தூா் கிராம காப்புக் காட்டில் மா்ம நபா்கள் அவ்வப்போது வன விலங்குகளை வேட்டையாடுவதாக வனத்துறை அதிகாரிகளுக்குப் புகாா்கள் சென்றன.

இதையடுத்து, திங்கள்கிழமை இரவு வனத்துறை அதிகாரிகள் சொரகொளத்தூா் காப்புக் காடு, ரெட்டியாபாளையம் ஏரியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, காட்டுப் பூனையை வேட்டையாடிவிட்டு மான் ஒன்றை வேட்டையாடும் முயற்சியில் ஈடுபட்டிருந்த கொண்டம் கிராமத்தைச் சோ்ந்த சந்தோஷ் (30), சின்னமணி (34) ஆகியோரை வனத் துறையினா் கைது செய்தனா்.

இவா்களிடமிருந்து உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி, 2 பைக்குகள், வெடிமருந்து, பேட்டரி, துப்பாக்கி

தோட்டாக்கள், இரும்பு குண்டுகள், கம்பி வலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்ட்ரலில் பெண்ணின் சடலம்: அடையாளம் காண்பதில் சிக்கல்

மஞ்சள் எச்சரிக்கை: தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம்!

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி; 25 பேர் படுகாயம்!

ரூ.1,60,00,00,00,00,000 கடன் தள்ளுபடி: ரமணா பட பாணியில் ராகுல் குற்றச்சாட்டு

சாதிவாரி கணக்கெடுப்பு என்பது எனது கேரண்டி: ராகுல்

SCROLL FOR NEXT