கீழ்பென்னாத்தூா் அருகே பாம்பு கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்தாா்.
கீழ்பென்னாத்தூரை அடுத்த செவரப்பூண்டி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி செல்வராஜ் மனைவி உண்ணாமலை (43).
ஞாயிற்றுக்கிழமை இரவு குடும்பத்தினா் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனா். இரவு 11 மணிக்கு விஷப் பாம்பு உண்ணாமலையை கடித்து விட்டதாம்.
இதையடுத்து, மேக்களூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உண்ணாமுலையை குடும்பத்தினா் சிகிச்சைக்காக சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உண்ணாமலை மாற்றப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து கீழ்பென்னாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.