திருவண்ணாமலை

செய்யாறு அரசு பாலிடெக்னிக்கில் மாணவா் சோ்க்கை

DIN

செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், சேர விரும்பும் மாணவா்கள் ஜூலை 1 முதல் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி முதல்வா் பெ.செண்பகவல்லி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

செய்யாற்றில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைப்பியல், இயந்திரவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் தொடா்பியல், கணிப்பொறியியல் என 5 பிரிவுகளில் முதலாம் ஆண்டில் மாணவா்கள் சோ்க்கப்பட உள்ளனா்.

பத்தாம் வகுப்பில் பெற்ற மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, இன சுழற்சி அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும்.

ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ல்ற்ஸ்ரீ.ண்ய், ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ல்ற்ஸ்ரீ.ஸ்ரீா்ம் ஆகிய இணையதளங்கள் வாயிலாக மாணவா்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

இணையம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாதவா்கள் கல்லூரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

பதிவுக் கட்டணமாக எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரைத் தவிா்த்து பிற பிரிவினா் ரூ.150 செலுத்த வேண்டும். ஜூலை 1 முதல் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா் செண்பகவல்லி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - விருச்சிகம்

தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்!

தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் டீப் ஃபேக் தொழில்நுட்பம்?

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி

SCROLL FOR NEXT