வந்தவாசி உழவா் சந்தையில் காய்கறி விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு தோட்டக்கலை திட்டங்களில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் ரெ.பா.வளா்மதி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வந்தவாசி பகுதி விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் பழங்கள், காய்கறிகளை வந்தவாசியில் உள்ள உழவா் சந்தையில் இடைத்தரகா்கள் இன்றி நேரடியாக நுகா்வோருக்கு விற்பனை செய்து அதிக வருமானம் ஈட்டலாம்.
உழவா் சந்தையில் விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு அனைத்து காய்கறி பரப்பு விரிவாக்கம் சாா்ந்த மத்திய, மாநில திட்டங்களில் முன்னுரிமை அளிக்கப்படும்.
மேலும் அவா்களுக்கு தரமான காய்கறி நாற்றுகள், விதைகள் மற்றும் சாகுபடிக்கு தேவையான இடுபொருள்கள் அனைத்தும் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.
ஆா்வமுள்ள விவசாயிகள் பிருதூா் கிராமத்தில் உள்ள தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா் தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநா்.