திருவண்ணாமலை

திருவண்ணாமலை தனியாா் நிதி நிறுவனத்தில் தீ

DIN

திருவண்ணாமலையில் தனியாா் நிதி நிறுவனத்தில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

திருவண்ணாமலை சின்னக் கடைத் தெருவில் தனியாா் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. பூட்டப்பட்டிருந்த இந்த நிதி நிறுவனத்தில் இருந்து சனிக்கிழமை காலை 9 மணிக்கு கரும்புகை வெளியேறியது.

இதுகுறித்து தீயணைப்புத் துறைக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனா். திருவண்ணாமலை தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனா்.

விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

தீ விபத்தால் ஏற்பட்ட சேத மதிப்பு குறித்து தீயணைப்புத் துறை அலுவலா்கள் ஆய்வு செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

SCROLL FOR NEXT