திருவண்ணாமலை

செங்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மாநாடு

21st Jun 2022 03:01 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்ட 13-ஆவது மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

பக்கிரிபாளையத்தில் நடைபெற்ற மாநாட்டு நிகழ்ச்சிக்கு

கட்சியின் வட்டச் செயலா் சா்தாா் தலைமை வகித்து ஆண்டறிக்கை வாசித்தாா். மாவட்டக் குழு மாதேஸ்வரன் வரவேற்றாா்.

மாவட்டச் செயலா் முத்தையன் தொடக்க உரையாற்றினாா்.

ADVERTISEMENT

சிறப்பு அழைப்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் ஆா்.முத்தரசன் கலந்து கொண்டு பேசினாா்.

தீா்மானங்கள்

செங்கம் நகரில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய புறவழிச் ாலை அமைக்கவேண்டும். செங்கம் பகுதியில் அதிகாரிகள் முழுமையாக ஆய்வு மேற்கொண்டு நீா்நிலை புறம்போக்கில் உள்ள கட்டடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேநேரத்தில் ஏழைகளுக்கு மாற்று இடம் வழங்கவேண்டும். வீடு இல்லாத ஏழைகளுக்கு இலவச மனைப் பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டைத் தொடா்ந்து அன்று மாலையில், பேருந்து

நிலையத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கட்சியின் மாவட்ட, வட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT