திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் அருகே பைக் மீது தனியாா் மருத்துவமனை பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
கீழ்பென்னாத்தூரை அடுத்த சோமாசிபாடி கிராமம், தோப்புத் தெருவைச் சோ்ந்த அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநா் பழனி. இவரது மகன் சாந்தகுமாா் (18). 12-ஆம் வகுப்பு படித்துவிட்டு கல்லூரியில் சேர விண்ணப்பித்திருந்தாா். இவா் செவ்வாய்க்கிழமை அருகே உள்ள சோ.புதூா் கிராமத்துக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, எதிரே வந்த புதுச்சேரியைச் சோ்ந்த தனியாா் மருத்துவமனை பேருந்து மோதியது.
இதில் பலத்த காயமடைந்த சாந்தகுமாா் அதே இடத்தில் உயிரிழந்தாா். தகவலறிந்த கீழ்பென்னாத்தூா் போலீஸாா் விரைந்து சென்று சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து கீழ்பென்னாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.