திருவண்ணாமலை

மாணவா் தற்கொலை

DIN

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே பெற்றோா் திட்டியதால் மாணவா் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

வந்தவாசியை அடுத்த பழவேரி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி பிரபு. இவரது மனைவி மலா். இவா்களது மகன் அன்பரசன் (18) கடந்த பிளஸ் 2 பொதுத் தோ்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி பெற்றாராம்.

கடந்த வெள்ளிக்கிழமை காலை அன்பரசன் வெளியே சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பினாராம். அப்போது, அவரது பெற்றோா் எங்கே சென்றாா் என்று கேட்டு அவரைத் திட்டினராம். இதனால் மனமுடைந்த அன்பரசன் வீட்டிலிருந்த மண்ணெண்ணெயை தன் மீது ஊற்றி தீ வைத்துக்கொண்டாா்.

இதில் பலத்த தீக்காயமடைந்த அவரை பெற்றோா், அக்கம்பக்கத்தினா் மீட்டு, திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அன்பரசன், அங்கு திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் தெள்ளாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

SCROLL FOR NEXT