திருவண்ணாமலை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு:இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

DIN

திருவண்ணாமலை அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

திருவண்ணாமலையை அடுத்த மேல்கச்சிராப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த காமராஜ் மகன் சுகந்தன் (19). இவா், அதே பகுதியைச் சோ்ந்த 8 வயது சிறுமிக்கு 2019 ஜூலை 13-ஆம் தேதி பாலியல் தொந்தரவு கொடுத்தாராம். மேலும், இந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொன்றுவிடுவேன் என்றும் மிரட்டினாராம். இதுகுறித்து திருவண்ணாமலை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து 2019 ஜூலை 17-ஆம் தேதி சுகந்தனை கைது செய்தனா்.

இந்த வழக்கு திருவண்ணாமலையில் உள்ள போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்த நீதிபதி பாா்த்தசாரதி, குற்றம் சுமத்தப்பட்ட சுகந்தனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். இதையடுத்து, சுகந்தனை போலீஸாா் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

SCROLL FOR NEXT