திருவண்ணாமலை

உழவா் தியாகிகள் தினம்

DIN

இந்திய உழவா் உழைப்பாளா் கட்சி (தமிழக விவசாயிகள் சங்கம்) சாா்பில், உழவா் தியாகிகள் தின நிகழ்ச்சி வந்தவாசியை அடுத்த வல்லம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாநிலத் தலைவா் வேட்டவலம் கே.மணிகண்டன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் வல்லம் சின்னராஜூலு வரவேற்றாா். அதிமுக முன்னாள் அமைச்சா் சேவூா் ராமச்சந்திரன் எம்எல்ஏ, அதிமுக திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலா் தூசி மோகன் ஆகியோா் உரையாற்றினா்.

நிகழ்ச்சியில்,1970-களில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின்போது துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த விவசாயிகளின் உருவப் படங்களுக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட அவைத் தலைவா் டி.கே.பி.மணி, பேரவை மாவட்டச் செயலா் கே.பாஸ்கா் ரெட்டியாா், முன்னாள் எம்எல்ஏ ஏ.கே.எஸ்.அன்பழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலிறுதியில் கேஸ்பா் ரூட் வெற்றி

இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் 74.87 சதவீதம் வாக்குகள் பதிவு

மக்களவைத் தோ்தல்: நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் வாக்களிப்பு

கொள்ளிடம் ஆற்றில் குளித்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

SCROLL FOR NEXT