திருவண்ணாமலை

கூட்டுறவு வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

செங்கம் கூட்டுறவு வங்கி அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் இணைச் செயலா் சண்முகம் தலைமை வகித்தாா்.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் மாவட்டத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி, கூட்டுறவு சங்கப் பணியாளா் மதிவாணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டுறவு வங்கி ஊழியா் ஊதிய உயா்வு குறித்த பேச்சிவாா்த்தையை உடனடியாக தொடங்கவேண்டும், துணை ஊழியா்களை அனைத்து வங்கிகளிலும் உடனடியாக நியமனம் செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி செங்கம் கிளை முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்து ஊழியா்கள், யூனியன் நிா்வாகிகள் முன்னிலையில் ஆா்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒட்டன்சத்திரம் பகுதி வாக்குச்சாவடியில் மாலை 6 மணி மேல் நீடித்த வாக்குப்பதிவு

37 சாவடிகளில் தாமதமாக தொடங்கிய வாக்குப் பதிவு

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் கரூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் பெயா் இடம் பெற்றதில் குளறுபடி: எம்எல்ஏ புகாா்

தள்ளாத வயதிலும் வாக்களித்த மூதாட்டி!

சமூக ஊடகங்களில் அவதூறு: மாா்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளா் புகாா்

SCROLL FOR NEXT