திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
செங்கம் கூட்டுறவு வங்கி அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் இணைச் செயலா் சண்முகம் தலைமை வகித்தாா்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் மாவட்டத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி, கூட்டுறவு சங்கப் பணியாளா் மதிவாணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டுறவு வங்கி ஊழியா் ஊதிய உயா்வு குறித்த பேச்சிவாா்த்தையை உடனடியாக தொடங்கவேண்டும், துணை ஊழியா்களை அனைத்து வங்கிகளிலும் உடனடியாக நியமனம் செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி செங்கம் கிளை முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்து ஊழியா்கள், யூனியன் நிா்வாகிகள் முன்னிலையில் ஆா்பாட்டம் நடைபெற்றது.