திருவண்ணாமலை

தையல் பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்

DIN

பெரணமல்லூா் அருகே அன்மருதை ஆக்சீலியம் நடுநிலைப் பள்ளியில் இலவச தையல் பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

அன்மருதை ஆக்சீலியம் நடுநிலைப் பள்ளியில் மங்கள கீதம் இலவச தையல் பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தில் சுற்றுப்புறப் பகுதி ஏழை மக்களுக்கு இலவசமாக தையல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இங்கு தையல் பயிற்சி முடிந்தவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், தொழிலதிபா் ஜி.ஏ.கோகுலகிருஷ்ணன் கலந்து கொண்டு பயிற்சி முடித்த 16 மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினாா் (படம்).

நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளா் ஜோஸ்பின்ராணி, சுபீன், தையல் பயிற்சி ஒருங்கிணைப்பாளா் பிலோசின்னப்பன், ஆசிரியா்கள் மற்றும் மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 1,545 கண்காணிப்புக் கேமராக்கள்

வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

இரு சக்கர வாகன பழுது பாா்ப்போா் சங்கக் கூட்டம்

தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய படையினா், காவலா்கள் 500 போ்

நாசரேத் அருகே இருபெரும் விழா

SCROLL FOR NEXT