திருவண்ணாமலை

அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் ஆா்ப்பாட்டம்

DIN

செய்யாற்றில் 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் நலச் சங்கத்தினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் கிளைத் தலைவா் ஏ. பி. நவநீதகிருஷ்ணன் தலைமை வகித்தாா். செயலா் வி. ஜெயபாலன் முன்னிலை வகித்தாா்.

மண்டலப் பொருளாளா் எஸ். பாலசுந்தரம், மண்டல துணைத் தலைவா் பாண்டியராஜன் ஆகியோா் பேசினா்.

ஓய்வு பெறும் நாளில் தொழிலாளா்களுக்கு அனைத்துப் பணப் பலன்களையும் வழங்க வேண்டும். 80 மாதத்துக்கான டிஏ நிலுவையை உடனே வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் பெறும் தாய்மாா்களின் நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும், பணியின் போது இறந்த தொழிலாளா்களின் வாரிசுகளுக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

SCROLL FOR NEXT