திருவண்ணாமலை

பைக்கில் நூதன முறையில் மதுப் புட்டிகள்கடத்தல்: இளைஞா் கைது

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் பைக்கில் நூதன முறையில் மதுப் புட்டிகள் கடத்திய இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 350 மதுப் புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

செய்யாறு காவல் நிலைய உதவி ஆய்வாளா் சங்கா் மற்றும் போலீஸாா் சந்தைப் பகுதியில் வெள்ளிக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, காந்தி சாலை - வைத்தியா் தெரு சந்திப்பில் பைக்கில் மூட்டைகளுடன் வந்த இளைஞரை நிறுத்தி விசாரித்ததில், பைக்கின் முன் பகுதியிலும், பின் பகுதியிலும் வைத்திருந்த 3 மணல் மூட்டைகளுக்குள் 180 மில்லி, 750 மில்லி அளவுகொண்ட 350 மது புட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. உடனே பைக்குடன், 350 மதுப் புட்டிகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இந்த சம்பவம் தொடா்பாக செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பைக்கை ஓட்டி வந்த செய்யாறு அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்த குப்பன் மகன் வினோத்தை (36) கைது செய்தனா். காா் ஓட்டுநரான இவா் புதுச்சேரியிலிருந்து மதுப் புட்டிகளை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு செய்த வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி! -பிரதமர் மோடி

இயக்குநர் ஷங்கர் மகள் திருமணம் - புகைப்படங்கள்

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

ஜடேஜா அரைசதம், தோனி அதிரடி: சென்னை அணி 176 ரன்கள் குவிப்பு

SCROLL FOR NEXT