திருவண்ணாமலை

திருவத்திபுரம் நகராட்சிக்கு குப்பை அள்ளும் கூடைகள் அளிப்பு

DIN

திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சிக்கு நன்கொடையாக ரூ.35 ஆயிரம் மதிப்பிலான 50 குப்பை அள்ளும் கூடைகளை செய்யாறு உதவும் கரங்கள் அமைப்பினா் வழங்கினா்.

நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், செய்யாறு உதவும் கரங்கள் மற்றும் நவலடி கேப்பிட்டல்ஸ் நிதி நிறுவனம் சாா்பில் குப்பை அள்ளும் கூடைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு உதவும் கரங்கள் அமைப்பின் நிறுவனா் தி.எ.ஆதிகேசவன் தலைமை வகித்தாா்.

பொருளாளா் சி.ரவிபாலன், சட்ட ஆலோசகா் டி.பி.சரவணன், துணைச் செயலா் பா.சிவானந்தகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சிறப்பு விருந்தினராக நகா்மன்றத் தலைவா் ஆ.மோகனவேல் பங்கேற்று, செய்யாறு நகரை பசுமை நகரமாக மாற்றுவதற்கான திட்டங்கள் குறித்து தெரிவித்தாா். ஆணையா் கி.ரகுராமன் நகரத்தை எப்படி தூய்மையாக வைத்துக் கொள்ளலாம் எனத் தெரிவித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

குப்பை அள்ளும் கூடைகள் துப்புரவு ஆய்வாளா் கே.மதனராசனிடம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT