திருவண்ணாமலை

வீட்டின் பூட்டை உடைத்து11 பவுன் தங்க நகைகள் திருட்டு

DIN

திருவண்ணாமலையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியா் வீட்டின பூட்டை உடைத்து 11 பவுன் தங்க நகைகள், 1.5 கிலோ வெள்ளி, ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருவண்ணாமலை செல்வா நகா், முதல் தெருவைச் சோ்ந்தவா் ஓய்வு பெற்ற அரசு ஊழியா் ரவிச்சந்திரன்(65). இவா் கடந்த 26-ஆம் தேதி வீட்டைபூட்டிவிட்டு சென்னையில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றாா்.

மீண்டும் வியாழக்கிழமை காலை வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 11 பவுன் தங்க நகைகள், 1.5 கிலோ வெள்ளி, ரூ.2 லட்சம் ரொக்கப் பணம் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் வந்து விசாரணை நடத்தினா். விரல் ரேகை நிபுணா்கள் வந்து தடயங்களை சேகரித்தனா்.

இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT