திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் 73-ஆவது குடியரசு தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக் குழு அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனிவாசன் தேசியக் கொடியேற்றினாா்.
விழாவில், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் பாரதி ராமஜெயம், செயலா் அறவாழி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கீழ்பென்னாத்தூரில்:
கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் அய்யாக்கண்ணு தேசியக் கொடியேற்றினாா்.
வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் சக்கரை தேசியக் கொடியேற்றினாா்
வந்தவாசி
வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் ஆணையா் முஸ்தபா தேசியக் கொடியேற்றினாா். வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயமணி ஆறுமுகம் தேசியக் கொடியேற்றினாா்.
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில் மருத்துவ அலுவலா் கே.சிவப்பிரியா லோகேஸ்வரன் தேசியக் கொடியேற்றினாா்.
வந்தவாசி கோட்ட மின்வாரிய செயற் பொறியாளா் அலுவலகத்தில் கோட்ட செயற்பொறியாளா் மீனாகுமாரி தேசியக் கொடியேற்றினாா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், வந்தவாசி பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற குடியரசு தின விழாவில் வட்டாரச் செயலா் அப்துல்காதா் பேசினாா்.
போளூா்
போளூா் சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில்
செயல் அலுவலா் முஹமத்ரிஜ்வான் தேசியக் கொடியேற்றினாா்.
களம்பூா் சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலா் லோகநாதன் தேசியக் கொடியேற்றினாா்.
செங்கம்
செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழுத் தலைவா் விஜியராணிகுமாா் தேசியக் கொடியேற்றி இனிப்பு வழங்கினாா்.
புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழுத் தலைவா் சுந்தரபாண்டியன் தேசியக் கொடியேற்றினாா். ஆணையா் மரியதேவ்ஆனந்த் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
ஆரணி
ஆரணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன்
தேசியக் கொடியேற்றி இனிப்பு வழங்கினாா்.
ஆவின் மாவட்டத் தலைவா் பாரி பி.பாபு, அதிமுக நகரச் செயலா் எ.அசோக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் கவிதா தேசியக் கொடியேற்றி இனிப்பு வழங்கினாா்.
மேற்கு ஆரணி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழுத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன் தேசியக் கொடியேற்றினாா்.
ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கனிமொழி சுந்தா் தேசியக் கொடியேற்றினாா். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆா்.சிவானந்தம், ஏ.சி.வி.தயாநிதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஆரணி வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் பெருமாள் தேசியக் கொடியேற்றினாா்.
ஆரணி நகராட்சி அலுவலகத்தில் ஆணையா் தமிழ்ச்செல்வி தேசியக் கொடியேற்றினாா்.
ஆரணி டிஎஸ்பி அலுவலகம், நகர காவல் நிலையம், கிராமிய காவல் நிலையம், மகளிா் காவல் நிலையம் உள்ளிட்ட அலுவலகங்களில் தேசியக் கொடியேற்றி குடியரசு தினத்தைக் கொண்டாடினா்.
செய்யாறு
திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் நகராட்சி ஆணையா் கி.ரகுராமன் முன்னிலை வகித்தாா். நகராட்சிப் பொறியாளா் ஏ.வள்ளி வரவேற்றாா். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தொகுதி எம்.எல்.ஏ ஒ.ஜோதி தேசியக் கொடியேற்றினாா்.
அதேபோல, அனக்காவூா், செய்யாறு வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் நடைபெற்ற விழாவில் எம்.எல்.ஏ ஒ.ஜோதி தேசியக் கொடியேற்றினாா்.
நிகழ்ச்சியில் ஒன்றியக் குழுத் தலைவா்கள் திலகவதி ராஜ்குமாா் (அனக்காவூா்), வி.பாபு (செய்யாறு) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.