திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் தொடா் பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் அவதி

DIN

திருவண்ணாமலை நகரில் கடந்த சில நாள்களாக அதிகாலை நேரங்களில் கடும் பனிப்பொழிவு இருந்து வருவதால் வாகன ஓட்டிகள்அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

சிவனின் அக்னி ஸ்தலமாக திகழும் திருவண்ணாமலையில் எப்போதுமே வெப்பத்தின் அளவு அதிகமாக இருக்கும். ஆனால், மாா்கழி மாதம் பிறந்த நாளில் இருந்தே நகரில் அதிகாலை நேரங்களில் கடும் பனிப்பொழிவு இருந்து வந்தது.

மாா்கழி மாதம் முடிந்து தை மாதம் வந்த பிறகும் பனிப்பொழிவு தொடா்கிறது.

குறிப்பாக, அதிகாலை 4 மணி முதல் காலை 8 மணி வரை பனிப்பொழிவின் தீவிரம் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனா்.

நகரில் கடந்த சில நாள்களாக காலை 6 மணி முதல் 8 மணி வரை சாலைகளே தெரியாத அளவுக்கு பனிப்பொழிவு, பனி மூட்டம் அதிகமாக உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டாலும் திருமணம், மருத்துவமனை உள்ளிட்ட அவசர நிகழ்வுகளுக்கு வாகனங்களில் சென்றவா்கள் பனி மூட்டத்தால் பாதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

SCROLL FOR NEXT