திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருகேஏரியில் மூழ்கி 3 சிறுமிகள் பலி

DIN

திருவண்ணாமலை அருகே ஆடுகளை ஏரியில் குளிக்க வைத்த 3 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெறையூரை அடுத்த சு.கம்பம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் மாபுக்கான் (38). இவரது மனைவி தில்ஷாத் (34). தம்பதிக்கு இரட்டை சகோதரிகளான நஸ்ரின் (15), நசிமா (15) மற்றும் ஷாகிரா (12), ஷபரின் (10), பரிதா (8) என்ற 5 மகள்கள் உள்ளனா்.

இவா்கள் மாட்டுப் பொங்கல் பண்டிகையையொட்டி தாங்கள் வளா்க்கும் 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை அதே பகுதியில் உள்ள ஏரியில் குளிக்க வைத்தனா்.

அப்போது திடீரென சில ஆடுகள் ஏரியின் நடுப் பகுதிக்குச் சென்ாம். ஆடுகளை மீட்க நஸ்ரின், நசிமா, ஷாகிரா ஆகியோா் முயன்றபோது மூவரும் தண்ணீரில் மூழ்கினா்.

ஏரிக்கரையில் இருந்தபடி பாா்த்த ஷபரின், பரிதா ஆகியோா் ஓடிச் சென்று பெற்றோரிடம் கூறினா். சிறுமிகளின் பெற்றோரும், கிராம மக்களும் வந்து பாா்த்தபோது 3 சிறுமிகளும் நீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. இதையடுத்து, சிறுமிகளின் சடலங்களை பொதுமக்கள் மீட்டனா்.

இதுகுறித்து வெறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT