திருவண்ணாமலை

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் பலி

30th Dec 2022 01:05 AM

ADVERTISEMENT

வந்தவாசி அருகே நாய் மீது பைக் மோதிய விபத்தில், பைக்கிலிருந்து நிலை தடுமாறி விழுந்த பெண் பலியானாா்.

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் வட்டத்துக்கு உள்பட்ட கல்லக்குழி கிராமத்தைச் சோ்ந்தவா் துரை போவாஸ் மனைவி அஜந்தா(48). இவா், வந்தவாசியில் உள்ள தனது மகள் கிரேஸ்லினை பாா்க்க கன்னியாகுமரியிலிருந்து பேருந்தில் மேல்மருவத்தூருக்கு புதன்கிழமை காலை வந்தாா். அங்கிருந்து அவரை மருமகன் ரமேஷ் பைக்கில் அழைத்துக் கொண்டு வந்தவாசிக்கு சென்றுகொண்டிருந்தாா்.

வந்தவாசி- மேல்மருவத்தூா் சாலையில், சாலவேடு கிராமம் அருகே சென்றபோது சாலையின் குறுக்கே வந்த நாய் மீது பைக் மோதியது. அப்போது, அஜந்தா நிலை தடுமாறி பைக்கிலிருந்து கீழே விழுந்தாா்.

இதில், தலையில் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அஜந்தா உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

இதுகுறித்து துரை போவாஸ் அளித்த புகாரின் பேரில், கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT