திருவண்ணாமலை

கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே கட்டடப் பணியின்போது தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

வெம்பாக்கம் வட்டம், மாமண்டூா் கிராமம், தா்மாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (35), கட்டடத் தொழிலாளி. இவா், கடந்த 7-ஆம் தேதி அதே கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலைச் சொந்தமான கட்டடத்தில் வேலை செய்துகொண்டிருந்தாா். அப்போது, கால் தவறி கீழே விழுந்ததில் மணிகண்டனுக்கு தலை, இரு கால் பகுதிகளிலும் பலத்த காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவா், வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அண்ணாமலை வெற்றி பெற விரலை துண்டித்த பா.ஜ.க. பிரமுகர்!

ஏ.ஆர்.முருகதாஸ் - சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு எப்போது?

மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் வாக்குச்சாவடி செல்ல வாகன ஏற்பாடு: சத்யபிரதா சாகு

டி20 தொடர் இன்று தொடக்கம்; பாபர் அசாம் பேட்டி!

நயினார் நாகேந்திரன் மீதான வழக்கு: நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

SCROLL FOR NEXT