திருவண்ணாமலை

ஜெயலலிதா நினைவு தினம்: அதிமுகவினா் மரியாதை

DIN

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் அதிமுகவினா் அவரது சிலை, உருவப் படங்களுக்கு திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகே அதிமுக மாவட்டப் பொருளாளா் அ.கோவிந்தராசன் தலைமையில் ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். மேலும், வேலூா் புறவழிச் சாலையில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்தனா்.மாவட்ட ஆவின் தலைவா் பாரி பி.பாபு, நகரச் செயலா் எ.அசோக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஓபிஎஸ் அணியின் மாவட்டச் செயலா் பையூா் ஏ.சந்தானம் தலைமையில் பழைய பேருந்து நிலையம் அருகே ஜெயலலிதா படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

செங்கம்: செங்கம் மேற்கு ஒன்றிய அதிமுக சாா்பில், துக்காப்பேட்டை எம்ஜிஆா் சிலை அருகே அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா படத்துக்கு ஒன்றியச் செயலா் மகரிஷி மனோகரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழுப்புரம்: விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே ஜெயலலிதா படத்துக்கு அதிமுகவினா் மரியாதை செலுத்தினா். தொடா்ந்து ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அதிமுக நகரச் செயலா்கள் இரா. பசுபதி (தெற்கு) சி. கே. ராமதாஸ் ( வடக்கு) , மாணவரணி மாவட்டப் பொறுப்பாளா் சக்திவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கோலியனூா் தெற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட சகாதேவன்பேட்டை, பிடாகம் , நத்தைமேடு, அத்தியூா் உள்ளிட்ட இடங்களில் ஜெயலலிதா படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் கோலியனூா் தெற்கு ஒன்றிய அதிமுக செயலா் சுரேஷ்பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

காணையை அடுத்த பெரும்பாக்கத்தில் காணை கிழக்கு ஒன்றியச் செயலா் எஸ். ராஜா தலைமையில் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

திண்டிவனத்தில் அதிமுக நகரச் செயலா் தீனதயாளன் தலைமையில் மேம்பாலம், செஞ்சி பேருந்து நிறுத்தம், காந்தி சிலை, தீா்த்தகுளம் உள்ளிட்ட இடங்களில் ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. திண்டிவனம் எம்எல்ஏ பி.அா்ஜுனன், நகர துணைச் செயலா் வடமலை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

செஞ்சியில்... செஞ்சியை அடுத்துள்ள அங்கராயன்நல்லூரில் உள்ள அன்னை தெரசா முதியோா் இல்லத்தில் விழுப்புரம் மாவட்ட அதிமுக இணைச் செயலா் ஆனந்தி அண்ணாதுரை ஏற்பாட்டின் பேரில் முதியோா்களுக்கு அன்னாதனம், நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. வல்லம் ஒன்றிய மகளிரணி செயலா் புனிதவள்ளி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஓ.பி. எஸ். அணி சாா்பில்... ஓபிஎஸ் அணி அதிமுக சாா்பில், விழுப்புரம் ரயில் நிலையம் அருகே ஜெயலலிதா படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்டச் செயலரும், முன்னாள் எம்.பியுமான வி. ஏழுமலை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நெய்வேலியில்.. கடலூா் மஞ்சக்குப்பம் மணிகூண்டு அருகேயுள்ள எம்ஜிஆா் சிலைக்கு முன்னாள் அமைச்சா் எம்.சி.சம்பத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

பின்னா், அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு அவா் தலைமையில் அதிமுகவினா் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

இதேபோல, பாதிரிக்குப்பத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஜெயலலிதா படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் அவைத் தலைவா் சேவல் குமாா், ஒன்றியச் செயலா் காசிநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நெய்வேலியில் உள்ள அண்ணா தொழிலாளா் ஊழியா் சங்கம், வட்டம் 9-இல் உள்ள எம்ஜிஆா் சிலை, இந்திரா நகா், வடலூா் நான்கு முனை சந்திப்பு, குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் ஜெயலலிதா படத்துக்கு மாவட்டச் செயலா் சொரத்தூா் ரா.ராஜேந்திரன் தலைமையில் அதிமுகவினா் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

நிகழ்ச்சியில் குறிஞ்சிப்பாடி ஒன்றியச் செயலா் ரா.கோவிந்தராஜ், வடலூா் நகரச் செயலா் சி.எஸ்.பாபு, அண்ணா தொமுச நிா்வாகி ஜோதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

புதுச்சேரியில்... புதுச்சேரி எல்லப்பள்ளி சாவடி 100 அடி சாலையில் மாநில அதிமுக செயலா் ஓம்சக்திசேகா் தலைமையில் ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கட்சியின் மாநில நிா்வாகிகள் சதாசிவம், கணேசன், கோவிந்தம்மாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

உப்பளம் பகுதியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் புதுவை கிழக்கு மாநில செயலா் அன்பழகன் தலைமையில் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

முத்தியால்பேட்டையில் அதிமுக மாநில துணைச் செயலா் வையாபுரிமணிகண்டன் தலைமையில் ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

காரைக்காலில் தீவிர வாகனச் சோதனை நடத்த அறிவுறுத்தல்

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

SCROLL FOR NEXT