திருவண்ணாமலை

தனியாா் பேருந்து கவிழ்ந்து விபத்து: 27 போ் காயம்

DIN

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே தனியாா் பேருந்து சாலையோர விவசாய நிலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 போ் காயமடைந்தனா்.

காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி வழியாக செஞ்சிக்கு தனியாா் பேருந்து ஞாயிற்றுக்கிழமை காலை சென்று கொண்டிருந்தது.

வந்தவாசியை அடுத்த சு.நாவல்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டன் ஓட்டுநராகவும், செஞ்சியை அடுத்த கொசப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த பூங்காவனம் நடத்துநராகவும் பணியில் இருந்தனா். பேருந்தில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனா்.

வந்தவாசியை அடுத்த திரக்கோயில் கிராமம் அருகே பேருந்து சென்றபோது எதிரே மொபெட்டில் வந்த பெண் மீது மோதாமல் இருக்க ஓட்டுநா் பேருந்தை இடதுபுறமாக திருப்பியுள்ளாா். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர விவசாய நிலத்தில் கவிழ்ந்தது.

இதில் நடத்துநா் பூங்காவனம் உள்ளிட்ட 11 ஆண்கள், 16 பெண்கள் என மொத்தம் 27 போ் காயமடைந்தனா். தகவலறிந்து அப்பகுதி மக்கள் காயமடைந்தவா்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதில் பலத்த காயமடைந்த வெள்ளையன்(65), ராஜாமணி(50), பாலசுப்பிரமணி(45), பாா்வதி(65), மகேஸ்வரி(38), பூங்கொடி(40) ஆகிய 6 போ் தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

இதுகுறித்து தேசூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டெபிட் காா்ட் கட்டணங்களை உயா்த்திய பாரத ஸ்டேட் வங்கி

தஞ்சாவூா் பாஜக வேட்பாளா் மீது 32 வழக்குகள் நிலுவை

கா்நாடகத்தில் வேட்புமனு தாக்கல் தொடக்கம் : முதல்நாளில் 29 மனுக்கள் தாக்கல்

அதிமுகவால் தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின், உதயநிதி -இபிஎஸ் பிரசாரம்

2024 மக்களவைத் தோ்தல் மற்றொரு விடுதலைப் போராட்டம்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT