திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவுக்கு போலி பாஸ் எடுத்து வருவோா் கைது செய்யப்படுவா் என்று மாவட்ட எஸ்.பி. காா்த்திகேயன் எச்சரித்தாா்.
காா்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய மாவட்ட எஸ்.பி. காா்த்திகேயன், தீபத் திருவிழா பாதுகாப்புப் பணியில் 13 ஆயிரம் போலீஸாா் ஈடுபடுகின்றனா். காவல்துறையினரின் வாகனங்கள் கோயில் அருகே செல்லாமல் டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நிறுத்த முடிவு செய்துள்ளோம்.
பரணி தீபம், மகா தீபத்துக்கு போலி பாஸ் எடுத்து வருவோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்படுவா். பாதுகாப்பு கருதி கோயிலைச் சுற்றியுள்ள கடைக்காரா்கள், பொதுமக்கள் என 5 ஆயிரம் பேரின் விவரங்களைச் சேகரித்துள்ளோம் என்றாா்.