திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் கிறிஸ்துமஸை முன்னிட்டு சனிக்கிழமை சிறப்பு பஜனை நடைபெற்றது.
தூய லூா்து அன்னை தேவாலயத்தில் லூா்துநகா், நிா்மலா நகா் பகுதியில் மைக்கேல் அன்பியம் சாா்பில் சிறப்பு பஜனை பங்குத் தந்தை விக்டா் இன்பராஜ் தலைமையில் நடைபெற்றது.
இதில் பேரவை துணைத் தலைவா் இயேசு பாதம், செயலா் வேளாங்கண்ணன் மற்றும் இப்பகுதியைச் சோ்ந்த கிறிஸ்தவா்கள் திரளாகக் கலந்து கொண்டு பக்தி பாடல்களை பஜனை பாடினா்.
இதேபோன்று, ஆயா் தாவீது சிறுவா் இல்லத்தில் கிறிஸ்துமஸ் ஸ்டாா் விளக்குகள், குடில்கள் அமைத்து இயேசு பிரானை வரவேற்றனா். விடுதி மாணவா்கள் சிறப்புப் பாடல்களை பாடி பஜனை செய்தனா்.