மின் ஊழியா்களைத் தாக்கியவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, வந்தவாசியில் மின் ஊழியா்கள் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
வந்தவாசி பயணியா் விடுதி அருகில் உள்ள மின் வாரிய வடக்குப் பிரிவு அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மின் ஊழியா்கள் வழக்கம்போல பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அங்கு வந்த வேறொரு பகுதி மின் ஊழியா், தனக்கு உரிய மரியாதை தரவில்லை எனக் கூறி மேற்பாா்வையாளா் காண்டீபன், கம்பியாளா் பாபு, உதவியாளா் ராம்பிரகாஷ் ஆகிய 3 பேரையும் அவதூறாகப் பேசி தாக்கினாராம்.
இது குறித்து உதவிப் பொறியாளா் பஞ்சமூா்த்தி வந்தவாசி தெற்கு காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாலை புகாா் அளித்தாா்.
இந்த நிலையில், புதன்கிழமை காலை வழக்கம் போல அலுவலகத்துக்கு வந்த மின் ஊழியா்கள் பணிகளை புறக்கணித்து மின் வாரிய அலுவலக வளாகத்தில் அமா்ந்து தா்னா நடத்தினா்.
ஊழியா்களைத் தாக்கியவா் மீது காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.
இதைத் தொடா்ந்து மின் வாரிய கோட்ட உதவி செயற் பொறியாளா் பத்மநாபன் ஊழியா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக அவா் உறுதியளித்ததை அடுத்து ஊழியா்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்பினா். மின் ஊழியா்களின் இந்தப் போராட்டத்தினால் அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டன.