திருவண்ணாமலை

பயன்பாட்டுக்கு வராத வருவாய் ஆய்வாளா் அலுவலகக் கட்டடம்

DIN

சேத்துப்பட்டு வட்டம், தேவிகாபுரம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட வருவாய் ஆய்வாளா் அலுவலகக் கட்டடம் பயன்பாட்டுக்கு வராமலே உள்ளது.

சேத்துப்பட்டு வட்டம் தச்சாம்பாடி, கொழப்பலூா், தேவிகாபுரம் என 3 உள்வட்டங்களைக் கொண்டது.

தேவிகாபுரத்துக்கான வருவாய் ஆய்வாளா் அலுவலகம் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது.

இந்த நிலையில், வருவாய் ஆய்வாளா் அலுவலகத்துக்காக போளூா் சாலையில் சந்தைமேடு அருகே அரசு நிலத்தில் பொதுப்பணித் துறை சாா்பில், ரூ.21 லட்சத்தில் குடியிருப்புடன் கூடிய கட்டடம் கட்டப்பட்டது.

இந்த அலுவலகக் கட்டடம் திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமலேயே உள்ளது. இதன் அருகில் மதுக் கடை வேறு இயங்கி வருகிறது.

இந்தக் கட்டடப் பகுதியில் மதுப்பிரியா்கள் மது அருந்திவிட்டு புட்டிகளை உடைத்து போட்டு விட்டுச் செல்கின்றனா்.

மேலும், மாலை நேரங்களில் இங்கு சமூக விரோதச் செயல்களும் நடைபெறுகின்றன.

எனவே, உடனடியாக புதிய அலுவலக கட்டடத்தை திறந்து பயன்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT