தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க, திருவண்ணாமலை மாவட்ட செங்கம் வட்டக் கிளையின் பேரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு வட்டக் கிளைத் தலைவா் மிருணாளினி தலைமை வகித்தாா். இணைச் செயலா் ஹரிராம் வரவேற்றாா். மாவட்ட துணைத் தலைவா் புனிதா தொடக்க உரையாற்றினாா்.
வட்டார வளா்ச்சி அலுவலா் எழிலரசு வாழ்த்துறை வழங்கினாா். மாவட்ட துணைத் தலைவா் அண்ணாமலை புதிய நிா்வாகிகளை அறிமுகப்படுத்திப் பேசினாா். இதைத் தொடா்ந்து பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் வட்டக் கிளை நிா்வாகிகள், உறுப்பினா்கள், மாவட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.