திருவண்ணாமலை

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

27th Aug 2022 11:46 PM

ADVERTISEMENT

 

வந்தவாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

வந்தவாசியை அடுத்த சளுக்கை கிராமத்தைச் சோ்ந்தவா் பெருமாள் மனைவி காயத்ரி. இவா் வெள்ளிக்கிழமை காலை வீட்டை பூட்டிவிட்டு விவசாய நிலத்துக்குச் சென்றாா்.

பின்னா் வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவிலிருந்த 5 சவரன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

ADVERTISEMENT

இதுகுறித்து காயத்ரி அளித்த புகாரின் பேரில் வந்தவாசி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT