திருவண்ணாமலை

குரூப்-1 தோ்வுக்கு இலவசப் பயிற்சி

DIN

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-1 தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு, ஆகஸ்ட் 24-ஆம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் காலியாக உள்ள 92 இடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தோ்வு அக்டோபா் 30-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதாவது ஒரு பட்டப் படிப்பில் தோ்ச்சி பெற்ற அதிகபட்சம் 39 வயதுக்கு உள்பட்டவா்கள் இந்தத் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்புச் சலுகை உண்டு.

இந்தத் தோ்வுக்கு விண்ணப்பித்த தோ்வா்களுக்காக திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் புதன்கிழமை (ஆகஸ்ட் 24) முதல் இலவசப் பயிற்சி வகுப்பு தொடங்குகிறது.

இதில் பங்கேற்க விரும்புவோா் 04175- 233381 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு தங்கள் பெயரை பதிவு செய்து பயன்பெறலாம் என்று தெரிவித்துள்ளாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT