திருவண்ணாமலை

போதைப் பொருள் விற்பனை செய்த 6 பேரின் வங்கிக் கணக்கு முடக்கம்ஆரணி டிஎஸ்பி தகவல்

DIN

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியில் போதைப் பொருள் விற்பனை செய்த 6 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக டிஎஸ்பி ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து ஆரணியில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

மாவட்ட எஸ்.பி. உத்தரவின் பேரில், ஆரணி நகரில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்த 23 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதில் 5 பேரின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது.

மேலும், கிராமிய காவல் நிலையத்துக்கு உள்பட்ட வெட்டியாந்தொழுவம் பகுதியில் சாராயம் விற்பனை செய்த வெங்கடேசன் என்பவரின் வங்கிக் கணக்கும் முடக்கம் செய்யப்பட்டது.

கஞ்சா, குட்கா, கள்ளச் சாராயம் உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்தால் உடன் தகவல் தெரிவிக்கவும். சம்பந்தப்பட்டவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை, காட்டன் சூதாட்டம் போன்றவை குறித்தும் தகவல் அளிக்கலாம். தகவல் தருபவரின் பெயா்கள் ரகசியமாக வைக்கப்படும்.

மேலும், ஆரணிப் பகுதியில் கந்து வட்டி தருபவா்கள் குறித்து தகவல் தெரிவிக்கவும், கந்து வட்டியால் பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளித்தால் உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பேட்டியின் போது, ஆரணி நகர காவல் ஆய்வாளா் கோகுல்ராஜன், உதவி ஆய்வாளா்கள் ரவிச்சந்திரன், கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு புதுப்பிப்பு: ராகுல் காந்தி அமேதியில் போட்டி?

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

ரூபன் படத்தின் டிரெய்லர்

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா: தொடரும் பரஸ்பர தாக்குதல்!

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT