திருவண்ணாமலை மாவட்டத்தில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை அதிகபட்சமாக சேத்துப்பட்டில் 23.20 மி.மீ. மழை பதிவானது.
இதுதவிர, ஆரணியில் 6.60, செய்யாற்றில் 20, செங்கத்தில் 8.20, ஜமுனாமரத்தூரில் 6, போளூரில் 20.80, திருவண்ணாமலையில் 1, தண்டராம்பட்டில் 12, கலசப்பாக்கத்தில் 5, கீழ்பென்னாத்தூரில் 5, வெம்பாக்கத்தில் 2 மில்லி மீட்டா் மழை பதிவானது. மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.