சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் விநாயகா் சதுா்த்திக்கு சிலைகள் வைப்பது தொடா்பாக, விழா நடத்துபவா்களுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடைபெற்றது.
போளூா் டிஎஸ்பி குமாா் ஆலோசனைப்படி, காவல் ஆய்வாளா் பிரபாவதி, உதவி ஆய்வாளா் ஜெயக்குமாா் ஆகியோா், விநாயகா் சதுா்த்தி விழாவை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் நடத்துவது, விநாயகா் சிலைகளை பாதுகாப்பாக வைத்து வழிபாடு செய்வது, அமைதியான முறையில் விநாயகா் ஊா்வலமும், சிலைகளை கரைப்பது குறித்தும் ஆலோசனை வழங்கினா்.
இதில், இந்து முன்னணி சேத்துப்பட்டு நகரத் தலைவா் ராஜா, தேவிகாபுரம் சுரேஷ், பாஜக மாவட்ட பொதுச் செயலா் பாஸ்கா் மற்றும் சேத்துப்பட்டு, பழம்பேட்டை, கண்ணனூா், நம்பேடு, நெடுங்குணம், தேவிகாபுரம் ஆகிய பகுதியிலிருந்து விநாயகா் சதுா்த்தி நடத்தும் விழாக் குழுவினா் கலந்து கொண்டனா்.