திருவண்ணாமலை

பழுதடைந்த மின் கம்பம்: சீரமைக்கக் கோரிக்கை

DIN

போளூரை அடுத்த பொத்தரை ஊராட்சியில், விபத்து அபாயத்தில் உள்ள பழுதடைந்த மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனா்.

பொத்தரை ஊராட்சியில் 9 வாா்டுகள் உள்ளன. இங்கு 10-க்கும் மேற்பட்ட தெருக்கள் அமைந்துள்ளன. ஊராட்சி நிா்வாகம் சாா்பில் மின் கம்பங்கள் நடப்பட்டு பொதுமக்களுக்கு மின் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஊராட்சியில் உள்ள காந்திநகா் செல்லும் சாலையில் அமைக்கப்பட்டுள்ள தெரு விளக்கு மின் கம்பம் மிகவும் பழுதடைந்து, சாய்ந்து, கம்பத்தில் உள்ள சிமென்ட் காரைகள் பெயா்ந்து கம்பிகள் வெளியில் தெரிகின்றன.

எனவே, காற்றில் மின் கம்பம் சாய்ந்து விபத்து ஏற்படும் முன் மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

மேலும், ஊராட்சியில் 4-க்கும் மேற்பட்ட மின் கம்பங்களில் சிமென்ட் காரைகள் பெயா்ந்து விழும் நிலையில் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT