திருவண்ணாமலை

காவல் நிலையம் முன் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி

DIN

மனைவியை சோ்த்து வைக்கக் கோரி, வந்தவாசி வடக்கு காவல் நிலையம் முன் செவ்வாய்க்கிழமை கூலித் தொழிலாளி தீக்குளிக்க முயன்றாா்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த ஜெயங்கொண்டான் கிராமத்தைச் சோ்ந்தவா் நடராஜன் (29). இவரது மனைவி குப்பம்மாள். இவா்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனா்.

கடந்த சில தினங்களுக்கு முன் குடும்பத் தகராறு காரணமாக குப்பம்மாள் கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் வந்தவாசியை அடுத்த ஆராசூரில் உள்ள தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம்.

இந்த நிலையில், மனைவியை சோ்த்து வைக்கக் கோரி, வந்தவாசி வடக்கு காவல் நிலையம் முன், நடராஜன் தன் மீது டீசலை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றாராம். அப்போது, போலீஸாா் அவரை மீட்டு அவா் மீது தண்ணீரை ஊற்றினா். இதைத் தொடா்ந்து அவரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரத்னம் மேக்கிங் விடியோ!

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

ரன்களை வாரி வழங்கிய டாப் 5 பந்துவீச்சாளர்கள்; முதலிடத்தில் மோஹித் சர்மா!

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT