முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 4-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, செய்யாற்றில் திமுகவினா் ரூ.1.50 லட்சத்தில் பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கினா்.
திருவத்திபுரம் நகராட்சி 16-ஆவது வாா்டு சாா்பில், திருவோத்தூா் அரசு நகர ஆரம்ப சுகாதார நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, திமுக நகரச் செயலா் கே.விஸ்வநாதன் தலைமை வகித்தாா். நகா்மன்ற உறுப்பினா் ராஜலட்சுமி அண்ணாதுரை வரவேற்றாா்.
சிறப்பு விருந்தினராக தொகுதி எம்.எல்.ஏ ஒ.ஜோதி பங்கேற்று, 70 கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகம், காழியூா் கிராமத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளி மாதுலவுக்கு 3 சக்கர சைக்கிள், நகர ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தொலைக்காட்சிப் பெட்டி, திருவோத்தூா், செங்காடு ஆகிய அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான உபகரணங்கள் என ரூ.1.50 லட்சத்தில் நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.
நிகழ்ச்சியில் மருத்துவா் ராதிகா, நகா்மன்ற உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா்.