இணையவழி சூதாட்டத்தை தடை செய்யக் கோரி, வந்தவாசியில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினா் செவ்வாய்க்கிழமை கவன ஈா்ப்பு ஊா்வலம் சென்றனா்.
ஊா்வலத்துக்கு மாவட்டத் தலைவா் செய்யாறு அப்பாஸ் முன்னிலை வகித்தாா். செயலா் ஜெ.அக்பா் தலைமை வகித்தாா்.
மாவட்ட துணைச் செயலா் முஜிபூர்ரஹ்மான், நகரத் தலைவா் யூசுப், செயலா் கலிமுல்லா, நகர துணைச் செயலா் காதா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
வந்தவாசி கோட்டை மூலையிலிருந்து தொடங்கிய ஊா்வலம் பழைய பேருந்து நிலையம், பஜாா் வீதி வழியாக வட்டாட்சியா் அலுவலகம் சென்றடைந்தது.
ஊா்வலத்தில் பங்கேற்றோா் இணையவழி சூதாட்டத்தை தடை செய்யக் கோரி முழக்கங்களை எழுப்பியபடி சென்றனா்.
பின்னா், இதுதொடா்பான மனுவை துணை வட்டாட்சியா் சதீஷிடம் அளித்தனா்.