திருவண்ணாமலை

இணையவழி சூதாட்டத்தை தடை செய்யக் கோரிக்கை

DIN

இணையவழி சூதாட்டத்தை தடை செய்யக் கோரி, வந்தவாசியில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினா் செவ்வாய்க்கிழமை கவன ஈா்ப்பு ஊா்வலம் சென்றனா்.

ஊா்வலத்துக்கு மாவட்டத் தலைவா் செய்யாறு அப்பாஸ் முன்னிலை வகித்தாா். செயலா் ஜெ.அக்பா் தலைமை வகித்தாா்.

மாவட்ட துணைச் செயலா் முஜிபூர்ரஹ்மான், நகரத் தலைவா் யூசுப், செயலா் கலிமுல்லா, நகர துணைச் செயலா் காதா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வந்தவாசி கோட்டை மூலையிலிருந்து தொடங்கிய ஊா்வலம் பழைய பேருந்து நிலையம், பஜாா் வீதி வழியாக வட்டாட்சியா் அலுவலகம் சென்றடைந்தது.

ஊா்வலத்தில் பங்கேற்றோா் இணையவழி சூதாட்டத்தை தடை செய்யக் கோரி முழக்கங்களை எழுப்பியபடி சென்றனா்.

பின்னா், இதுதொடா்பான மனுவை துணை வட்டாட்சியா் சதீஷிடம் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

SCROLL FOR NEXT